Selected
Original Text
Jan Turst Foundation
Abdullah Yusuf Ali
Abdul Majid Daryabadi
Abul Ala Maududi
Ahmed Ali
Ahmed Raza Khan
A. J. Arberry
Ali Quli Qarai
Hasan al-Fatih Qaribullah and Ahmad Darwish
Mohammad Habib Shakir
Mohammed Marmaduke William Pickthall
Muhammad Sarwar
Muhammad Taqi-ud-Din al-Hilali and Muhammad Muhsin Khan
Safi-ur-Rahman al-Mubarakpuri
Saheeh International
Talal Itani
Transliteration
Wahiduddin Khan
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.
83:1
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
83:1
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். - Jan Turst Foundation (Tamil)
83:2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
83:2
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். - Jan Turst Foundation (Tamil)
83:3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
83:3
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:4
أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
83:4
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? - Jan Turst Foundation (Tamil)
83:5
لِيَوْمٍ عَظِيمٍ
83:5
மகத்தான ஒரு நாளுக்காக, - Jan Turst Foundation (Tamil)
83:6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
83:6
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்- - Jan Turst Foundation (Tamil)
83:7
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
83:7
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது - Jan Turst Foundation (Tamil)
83:8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
83:8
'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? - Jan Turst Foundation (Tamil)
83:9
كِتَـٰبٌ مَّرْقُومٌ
83:9
அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். - Jan Turst Foundation (Tamil)
83:10
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
83:10
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். - Jan Turst Foundation (Tamil)
83:11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
83:11
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
83:12
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். - Jan Turst Foundation (Tamil)
83:13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
83:13
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான். - Jan Turst Foundation (Tamil)
83:14
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
83:14
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. - Jan Turst Foundation (Tamil)
83:15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
83:15
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
83:16
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:17
ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
83:17
"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். - Jan Turst Foundation (Tamil)
83:18
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
83:18
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது. - Jan Turst Foundation (Tamil)
83:19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
83:19
"இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? - Jan Turst Foundation (Tamil)
83:20
كِتَـٰبٌ مَّرْقُومٌ
83:20
(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். - Jan Turst Foundation (Tamil)
83:21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
83:21
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
83:22
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
83:23
ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
83:24
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். - Jan Turst Foundation (Tamil)
83:25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
83:25
(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:26
خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ
83:26
அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். - Jan Turst Foundation (Tamil)
83:27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
83:27
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும். - Jan Turst Foundation (Tamil)
83:28
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
83:28
அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
83:29
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
83:30
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
83:31
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
83:32
மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ
83:33
(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே! - Jan Turst Foundation (Tamil)
83:34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
83:34
ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
83:35
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள். - Jan Turst Foundation (Tamil)
83:36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
83:36
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.) - Jan Turst Foundation (Tamil)