Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

89 Al-Fajr ٱلْفَجْر

< Previous   30 Āyah   The Dawn      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

89:1 وَٱلْفَجْرِ
89:1 விடியற் காலையின் மீது சத்தியமாக, - Jan Turst Foundation (Tamil)

89:2 وَلَيَالٍ عَشْرٍ
89:2 பத்து இரவுகளின் மீது சத்தியமாக, - Jan Turst Foundation (Tamil)

89:3 وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
89:3 இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக, - Jan Turst Foundation (Tamil)

89:4 وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
89:4 செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக, - Jan Turst Foundation (Tamil)

89:5 هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ
89:5 இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா? - Jan Turst Foundation (Tamil)

89:6 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
89:6 உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? - Jan Turst Foundation (Tamil)

89:7 إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
89:7 (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், - Jan Turst Foundation (Tamil)

89:8 ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ
89:8 அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. - Jan Turst Foundation (Tamil)

89:9 وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
89:9 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) - Jan Turst Foundation (Tamil)

89:10 وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
89:10 மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) - Jan Turst Foundation (Tamil)

89:11 ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ
89:11 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். - Jan Turst Foundation (Tamil)

89:12 فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
89:12 அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். - Jan Turst Foundation (Tamil)

89:13 فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
89:13 எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். - Jan Turst Foundation (Tamil)

89:14 إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
89:14 நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான். - Jan Turst Foundation (Tamil)

89:15 فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
89:15 ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான். - Jan Turst Foundation (Tamil)

89:16 وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ
89:16 எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான். - Jan Turst Foundation (Tamil)

89:17 كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
89:17 அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. - Jan Turst Foundation (Tamil)

89:18 وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
89:18 ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. - Jan Turst Foundation (Tamil)

89:19 وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا
89:19 இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். - Jan Turst Foundation (Tamil)

89:20 وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا
89:20 இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். - Jan Turst Foundation (Tamil)

89:21 كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا
89:21 அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, - Jan Turst Foundation (Tamil)

89:22 وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا
89:22 உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, - Jan Turst Foundation (Tamil)

89:23 وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
89:23 அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். - Jan Turst Foundation (Tamil)

89:24 يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
89:24 "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான். - Jan Turst Foundation (Tamil)

89:25 فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ
89:25 ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். - Jan Turst Foundation (Tamil)

89:26 وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ
89:26 மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான். - Jan Turst Foundation (Tamil)

89:27 يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
89:27 (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! - Jan Turst Foundation (Tamil)

89:28 ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
89:28 நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. - Jan Turst Foundation (Tamil)

89:29 فَٱدْخُلِى فِى عِبَـٰدِى
89:29 நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. - Jan Turst Foundation (Tamil)

89:30 وَٱدْخُلِى جَنَّتِى
89:30 மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). - Jan Turst Foundation (Tamil)